தக்லீத் ஓர் ஆய்வு.
பி.ஜெ யை பின்பற்றுவதும் வழிகேடே! தொடர் - 02
ஸக்காத் பற்றிய ஆய்வின் ஆரம்பம் எது?
தவ்ஹீத்
ஜமாத் உலமாக்கள் பி.ஜெ யைத் தான் பின்பற்றுகிறார்கள் என்று அவதூறு
பரப்புபவர்கள் ஸக்காத் விஷயத்தில் தவ்ஹீத் ஜமாத்தின் ஆய்வைத் தான் பெரிதாக
எடுத்துப் பேசுவார்கள்.
ஆம்
ஒரு பொருளுக்கு வருடா வருடம் ஸக்காத் கொடுக்க வேண்டுமா? அல்லது ஒரு முறை
கொடுத்தால் போதுமா? என்று ஆய்வு செய்தால் ஒரு பொருளுக்கு ஒரு முறை தான்
ஸக்காத் கொடுக்க வேண்டும். வருடா வருடம் ஸக்காத் கொடுக்க வேண்டும் என்ற
கருத்தில் வரும் செய்திகள் பலவீனமானவையாக இருக்கிறது.
அதனால்
கொடுத்த பொருளுக்கே வருடா வருடம் ஸக்காத் கொடுக்க வேண்டும் என்று சொல்வது
தவறு என்ற முடிவை தவ்ஹீத் ஜமாத் வெளியிட்டது. இந்த முடிவை ததஜ வெளியிட்ட
நேரத்தில் பலரும் பலவிதமான விமர்சனங்களையும் முன்வைக்க ஆரம்பித்தார்கள்.
அதிலும்
குறிப்பாக பி.ஜெ அவர்கள் இது தொடர்பான ஒரு விவாதத்தை மதுரையில்
நடத்தினார்கள் அப்போது பி.ஜெ சொல்வதைத் தான் இவர்கள் பின்பற்றுகிறார்கள்
என்று தவ்ஹீத் ஜமாத்தின் மற்ற பிரச்சாரகர்களைப் பற்றி சிலர்
விமர்சித்தார்கள் இன்றும் விமர்சிக்கின்றார்கள்.
இவர்கள்
தெளிவாக அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில் ஸக்காத் விஷயத்தில்
இப்படியான ஒரு ஆய்வை முதலில் முன் வைத்தவர் பி.ஜெ அல்ல. எம்.ஐ சுலைமான்
அவர்கள் தான் இந்தக் கருத்தை ஆரம்பத்தில் வைத்தார்கள். அப்போது எம்.ஐ
சுலைமானின் கருத்துக்கு மாற்றமாக வருடா வருடம் ஸக்காத் கொடுக்க வேண்டும்
என்ற நிலைபாட்டில் உறுதியாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர் சகோதர் பி.ஜெ
அவர்கள். பின்னர் எம்.ஐ சுலைமான் சொல்வதுதான் சரியான ஆய்வு என்பதை விளங்கி
அந்த நிலைபாட்டிற்கு வந்தார்.
இப்போது எம்.ஐ சுலைமானை பி.ஜெ தக்லீத் செய்கிறார் என்று இவர்கள் சொல்வார்களா? சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பி.ஜெ க்கும் தவ்ஹீத் ஜமாத் உலமாக்களுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு வருவதில்லையா?
தவ்ஹீத்
ஜமாத்தின் உலமாக்களுக்கும் பி.ஜெ அவர்களுக்கும் மத்தியில் கருத்து
வேறுபாடே வருவதில்லை. காரணம் அவர்கள் பி.ஜெ சொன்னால் அதனை அப்படியே ஏற்றுக்
கொள்வார்கள் என்ற ஒரு குருட்டு விமர்சனத்தையும் சிலர் செய்கிறார்கள்.
அவர்கள்
தெளிவாக அறிந்து கொள்ள வேண்டிய ஒரு அடிப்படையான விஷயம் என்னவெனில்.
பெரும்பாலும் தவ்ஹீத் ஜமாத் அறிஞர்கள் யாரும் மார்க்க பிரச்சினைகளில்
ஆளுக்கு ஒரு கருத்தை பிரச்சாரம் செய்ய மாட்டார்கள். மார்க்க ரீதியில்
ஏதாவது பிரச்சினை ஏற்பட்டார் அனைவரும் ஒன்று கூடி ஆய்வு செய்து முடிவை
வெளியிடுவார்கள். அதனால் வெளியில் பிரச்சாரம் செய்யும் போது அனைவரும் ஒரே
கருத்தை சொல்வதினால் பி.ஜெ யைப் பின்பற்றுகிறார்கள் என்று வாதிட முனைவது.
வடிகட்டிய முட்டால் தனமாகும்.
மேற்கண்ட
விமர்சனம் ஒன்றும் புதிதாக கிளம்பியது அல்ல. தமுமுக வை விட்டு தவ்ஹீத்
ஜமாத் அறிஞர்கள் பிரிந்து வந்த நேரமே இந்த விமர்சனம் ஆரம்பித்து விட்டது.
பி.ஜெ
அவர்களுக்கும் மற்ற பிரச்சாரகர்களுக்கும் மத்தியில் எவ்வித கருத்து
வேறுபாடும் வராத அளவுக்கு அத்தனை பேரையும் பி.ஜெ மிரட்டி வைத்திருக்கிறார்
என்றொரு குற்றச் சாட்டை அப்போதே தமுமுக வின் சார்பாக ஜவாஹிருல்லாஹ்
வைக்கும் போது அதற்கு எம்.ஐ. சுலைமான் அவர்கள் பதில் கொடுத்தார்கள்.
அதில் தனக்கும் பி.ஜெ அவர்களுக்கும் இடையில் உள்ள கருத்து வேறுபாடுகளை பட்டியலிட்டு தெளிவுபடுத்தினார் எம்.ஐ. சுலைமான் அவர்கள்.
http://www.youtube.com/watch?v=qihrZgbH1O8&feature=player_embedded
பி.ஜெ
அவர்களுக்கும் தவ்ஹீத் ஜமாத் அறிஞர்களுக்கும் மத்தியில் பல விஷயங்களில்
கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கின்றது. அப்படியான நேரங்களில் எல்லாம்
அனைவரும் ஒன்று கூடி ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார்கள்.
இதுதான் ஜமாத்தின் வளர்சிக்கு பெரும் துணையாக இருக்கும் ஒரு விஷயம்.
பி.ஜெ யின் குர்ஆன் மொழியாக்கமும், ததஜ உலமாக்களின் பங்களிப்பும்.
அதே
போல் சகோ. பி.ஜெ யின் குர்ஆன் மொழியாக்கத்தை விமர்சிப்பவர்கள் பி.ஜெ
அவர்கள் தன்னிச்சையாக அதனை மொழியாக்கம் செய்த்தைப் போலவும், அவருடைய
மொழியாக்கத்தை அனைத்து உலமாக்களும் அப்படியே நம்பியதைப் போலவும் எழுதியும்,
பேசியும் வருகின்றார்கள். ஆனால் பி.ஜெ அவர்கள் திருமறைக் குர்ஆன்
மொழியாக்கத்தை வெளியிடுவதற்கு முன் ஜமாத்தின் மற்ற பிரச்சாரகர்கள் அதனை சரி
பார்த்து திருத்தங்கள் செய்த்தன் பின்னர் தான் வெளியிட்டார் என்பதே
உண்மையாகும்.
குர்ஆன்
மொழியாக்கத்தின் முதல் பதிப்பிலேயே அதன் கடைசிப் பகுதியில் சரி பார்த்த
உலமாக்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருக்கும். இதைப் பார்த்த பின்பும்
விமர்சிப்பவர்கள், காழ்ப்புணர்வின் காரணமாக விமர்சிக்கின்றார்களே தவிர
சத்தியம் அவர்களிடம் இல்லை என்பது இதன் மூலம் இன்னும் நிரூபணமாகின்றது.
தக்லீத் பற்றி பி.ஜெ யின் கருத்துக்கள்.
உலகத்தில்
யார் என்ன கருத்தை சொன்னாலும் அதனை குர்ஆன் மற்றம் ஸஹீஹான ஹதீஸ்களின்
அடிப்படையில் உரசிப் பார்த்துத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தவ்ஹீத்
ஜமாத் பிரச்சாரம் செய்கின்றது.
அதே போல் பி.ஜெ அவர்கள் கூட பல இடங்களிலும் இந்தக் கருத்தை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத் தக்கது. தக்லீத் தொடர்பாக பி.ஜெ யிடம் பல சந்தர்ப்பங்களில் கேட்க்கப்பட்ட கேள்விகளையும் அதற்குறிய பதில்களையும் ஒரு தொகுப்பாக இங்கு தருகின்றோம்.
ஆய்வு செய்யாமல் பின்பற்றலாமா?
ஆய்வு செய்துதான் பின்பற்ற வேண்டும். தவ்ஹீத் ஜமாத் சொன்னாலும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வது தவறு என்று பி.ஜெ யே சொல்லும் காட்சி.
பி.ஜெ சொன்னால் தான் சரியா?
நான் சொல்லும் செய்திகளை அனைத்தையும் தேடிப் பார்த்துக் கொள்ள வேண்டும். குர்ஆனில் இருக்கிறது என்று நான் சொன்னால் அதையும் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் சொன்னால் சரி என்று இருந்தால் நீங்கள் மத்ஹபுகளிலேயே இருந்திருக்களாம். அப்படி யாராவது நான் சொன்னால் சரி என்று நினைத்தால் அதற்கு நான் பொருப்பல்ல மறுமையில் அவர்களுக்கு எதிராக நான் பேசுவேன்.
எந்த அறிஞரையும் கண்மூடிப் பின்பற்றக் கூடாது.
எந்த அறிஞரின் கருத்தையும் கண்மூடிப் பின்பற்றக் கூடாது. அவர்கள்
சொல்வது குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களில் இருக்கின்றதா என்பதை பார்த்து
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொன்னால் மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும்.
http://www.youtube.com/watch?v=Dy-2Qkg-LFY&feature=player_embedded
பி.ஜெ பயானை மட்டும் கேட்பது சரியா?
பி.ஜெ
அல்லாத மற்ற அறிஞர்களின் பயான்களையும் கேட்க வேண்டும் அப்படி கேட்பதில்
குர்ஆன் மற்றும் ஸஹீஹான செய்திகளை சொல்பவர்களின் உண்மையை உணர்ந்து
மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டும்.
பி.ஜெ க்குப் பின் தவ்ஹீத் ஜமாத் இருக்காதா?
http://www.youtube.com/watch?v=3WEbLlB4xHc&feature=player_embedded
பி.ஜெ இல்லாமலேயே 2 வருடங்களுக்கும் மேலாக ஜமாத்தின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுத்தான் இருக்கின்றது. பி.ஜெ
இல்லாவிட்டாலும் அல்லாஹ்வின் மார்க்கத்தை நாம் சொல்ல முடியும் என்பதை ததஜ
பிரச்சாரகர்கள் நிரூபித்துக் காட்டினார்கள் என்பதுதான் இதில் இருந்து
தெரியவரும் முக்கிய விஷயம்.
தக்லீதுக்கு யார் பொருப்பு?
நாம்
ஒரு கருத்து சொன்னால் நமக்கு மாற்றமாக யாராவது சொல்லியிருந்தால் அதையும்
சேர்த்து பார்த்து இரண்டில் எது சரி என்பதை ஆதாரங்களின் அடிப்படையில்
முடிவெடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் தக்லீத் செய்ததாக மாறிவிடும்.
பொது மக்களின் தெளிவும், குழப்ப நினைக்கும் உலமாக்களும்.
ஏகத்துவத்தின்
அடிப்படையில் தெளிவான முறையில் முடிந்த வரை இஸ்லாத்தின் செயல்பாடுகளை
எடுத்து நடக்கும் மக்களுக்கு மத்தியில் குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்று
நினைக்கும் சில ஆலிம்கள் தான் தக்லீத் என்ற வாதத்தை கையில் எடுத்து அவதூறு
பரப்புகிறார்கள். அதிலும் அவர்கள் சொல்லும் செய்திகளை பொது மேடையில் நிரூபிப்பதற்கு முடியாமல் அறைக்குள் இருந்து ஆட்டம் போடுவதையும். மேடையில் வந்து நிரூபிக்க அழைத்தால் ஓடி ஒழிவதையும் நாம் கண் முன் காணக் கிடைக்கிறது.
எது
எப்படியோ ஏகத்துவத்தின் செய்திகளை வல்ல இறைவன் மிகத் தெளிவான முறையில்
மக்கள் மத்தியில் எத்தி வைப்பதற்கு நமக்கு என்றும் துணையாக இருக்கிறான்
என்ற எண்ணத்தில் நமது பயணத்தை தொடருவோம்.
அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.
No comments:
Post a Comment